1979ம் ஆண்டு வெளிவந்த படம் நீயா. இந்த படத்தில் கமல், ஸ்ரீப்ரியா நடித்திருந்தனர். பழிவாங்கும் இச்சாதாரி பாம்பு என்ற கதையில் இப்படம் வெளிவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நீயா 2 என்ற பெயரில் படம் தயாராகிறது. அதில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். ஷபிர் இசை அமைக்கிறார், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தை எல்.சுரேஷ் இயக்குகிறார். ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரிக்கிறார்.


நீயா படத்தின் கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று படத்தின் இயக்குனர் எல்.சுரேஷ் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில் இதில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.


படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படம் சுமார் ரூ.10 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது என்றார் படத்தின் இயக்குனர்.


தற்போது டைட்டில் லோகோ நாளை மாலை 5 வெளியிடப்போவதாக படக்குழு டிவிட்டரில் தெரிவித்து உள்ளது.