இந்திய சினிமாவையே கலக்கிய தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி'. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் சாதனை படைத்த ஓடம் இதுவாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு  ஜுலை 10-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. 


`பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.  


இதையடுத்து `பாகுபலி' படத்தின் 2 ஆண்டு நிறைவை ஒட்டி, நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி கடிதத்தை வெளியிட்டார். அதில் கூறியிருந்தது:-


என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். `பாகுபலி'  குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும், மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடு திரும்பிப் பார்க்க வைக்கின்றன. 


என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலி சாருக்கும், `பாகுபலி'  குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.


இவ்வாறு கூறியிருக்கிறார்.