Vichithra Evicted From Bigg Boss House: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் இருந்து, நடிகை விசித்ரா எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எவிக்ட் ஆன விசித்ரா..


நடிகை விசித்ரா, ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியின் பலமான போட்டியாளராக கருதப்பட்டார். அனைத்து வாரங்களும், இவர் இருக்கும் இடங்களில் சண்டை-சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இவர், இறுதிப்போட்டி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வார எவிக்‌ஷனிலேயே வெளியில் சென்றுள்ளார்.


அடுத்தது யார்?


பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில், இது கடைசி வார எவிக்‌ஷனாகும். இதையடுத்து நேரடியாக ஃபைனல்ஸ்தான். ஆனாலும், இந்த வீட்டில் கொஞ்சம் அதிகமான நபர்களே இருக்கின்றனர். இறுதி நிகழ்ச்சியின் போது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், இந்த வாரம் இருவர் எவிக்ட் செய்யப்படுவர். அந்த வகையில், இந்த வாரம் இரண்டு பேரில் விசித்ரா எவிக்ட் ஆகிவிட்டார். அடுத்ததாக மணிச்சந்திரா அல்லது மாயா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் வாக்களித்ததில், அடுத்த டேஞ்சர் சோனில் விஜய் வர்மா, மாயா மற்றும் மணிச்சந்திரா ஆகியோர்தான் உடனிருந்தனர். 


மேலும் படிக்க | Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?


பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா...


பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. 3 லட்சத்தில் ஆரம்பித்த இந்த தொகை, தொடர்ந்து ஏறிகொண்டும் இறங்கி கொண்டும் இருந்தது. இறுதியில், நேற்றைய எபிசோடில் 16 லட்சமாக இந்த தொகை ஏறியது. இதையடுத்து, மாயாவின் தோழி பூர்ணிமா இந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். ஆரம்பத்தில் மிகவும் குழப்பத்துடன் இருந்த அவர், ரன்னர் அப் பட்டத்தை பெறுபவர்களுக்கு கூட, இவ்வளவு தொகை கிடைக்காது என கூறினார். பின்பு. தன் முடிவே சரியானது என நம்பி அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். மேலும், இவரை இவரது குடும்பத்தினர் வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலானது. 


ஃபைனல்ஸ் செல்வது யார்?


பிக்பாஸ் இறுதிப்போட்டி, அடுத்த வாரம் நடைபெறும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 பேரில் ஒருவர் விஷ்ணு என்பது உறுதியாகிவிட்டது. காரணம், அவர் ஏற்கனவே டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வென்று டிக்கெட்டை கையில் வைத்துள்ளார். இவரையடுத்து பலமான போட்டியாளராக பார்க்கப்படுபவர், அர்ச்சனா. இவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளமாக உள்ளது. ஆனாலும் இவர் வைல்டு கார்டு மூலம் போட்டிக்குள் நுழைந்தவர் என்பதால் இவருக்கு டைட்டில் கொடுக்கப்ப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. இவரைப்போலவே வைல்டு கார்ட் மூலம் போட்டிக்குள் நுழைந்த தினேஷும் இறுதிப்போட்டி வரை செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. தற்போது டேஞ்சர் சோனில் உள்ள மாயா இந்த வாரம் எவிக்ட் ஆகாமல் இருந்தால், அவர் இறுதிப்போட்டிக்கான மேடையை இன்னொரு போட்டியாளருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | பிக்பாஸில் கடைசி வார எவிக்‌ஷன்! வெளியேறப்போகும் 2 போட்டியாளர்கள் இவர்கள்தானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ