புதுடெல்லி: கொரோனா வைரஸ் வெடித்ததால் உலகம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), ரஜினிகாந்த் (Rajinikanth), சிரஞ்சிவி (Chiranjivi), பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), ஆலியா பட் (Alia Bhatt) மற்றும் பல பிரபலங்கள் COVID-19 பற்றி விழிப்புணர்வை பரப்புவதற்கு ஒன்றாக வந்தனர். இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்ட்ரி தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட வி‌ஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இக்குறும்படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த குறும்படம் குறித்த ருசீகர தகவல் வெளியாகி உள்ளது. இக்குறும்படத்தில் மம்முட்டி நடித்த காட்சிகளை அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் தான் படமாக்கினாராம்.