ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலாமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இந்த வாரத்தில், மழையில் நனைந்த படி வெளியே காத்திருந்த தீபாவை கார்த்திக் வீட்டுக்குள் அழைத்து வர மீனாட்சி அவர்களுக்கு ஆரத்தி எடுப்பதை ஐஸ்வர்யா தடுத்து நிறுத்தினாள். தீபா வெளியே நின்று கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் இருந்த அபிராமி, பழைய விசயங்களை நினைத்து பார்த்து மயங்கி விழுந்தாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரபரப்பான திருப்பங்களுடன், நேற்றைய எபிசோட் முடிந்தது. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன?



கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்


தீபா மேலே ரூமில் வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்கிறாள். அங்கு வரும் அபிராமி என்னால யாருக்கும் எந்த கெட்டதும் நடக்க கூடாதுனு என் பையன் பேசினதால தான் நீ இங்க இருக்க, நீ இந்த வீட்டுக்குள்ள வந்துட்டதால என்னுடைய மருமகளா ஆகிட முடியாது என்று சொல்கிறார்.


இந்த வீட்டில் இருக்கும் கட்டில், ஷோபா மாதிரி நீயும் ஒரு பொருள் அவ்வளவு தான் என ஆவேசமாக பேசுகிறாள். மேலும் நீ 6 மாசம் டைம் கேட்டல, அதே ஆறு மாதத்தில் இதையெல்லாம் நீ திட்டம் போட்டு தான் பண்ணி இருக்கேனு நிரூபித்து நான் உன்னை இந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்புறேன்  என சவால் விடுகிறாள்.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட்


அதுமட்டுமில்லாமல் இந்த வீட்டில் நான் ரொம்ப பெருசா மதிக்கிறது பூஜையறையும் கிட்சனும் தான். இந்த வீட்டு வேலைக்காரி கூட இங்க எல்லாம் போகலாம், ஆனால் நீ போகவே கூடாது என கண்டிஷன் போடுகிறாள். 


மறுபக்கம் நட்சத்திரா இங்கே நடப்பது என்ன என்று தெரிந்து சொல்ல ஐஸ்வர்யாவுக்கு போன் செய்ய அவள் நடந்த விசயங்களை சொல்லி நீ இங்க வந்து  பேசு, என்ன பண்ணுறாங்கனு பாக்கலாம் என சொல்கிறாள். பிறகு அபிராமி யோசனையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து நட்சத்திரா துணி மூட்டைகளை தூக்கி கொண்டு வந்து நிற்க அபிராமி அதிர்ச்சி அடைகிறாள். 



பிறகு நட்சத்திரா உள்ளே வர அபிராமி நீ தான் இந்த வீட்டு மருமகளாகணும்னு ஆசையா இருந்தேன், ஆனால் நடக்க கூடாதது எல்லாம் நடந்து விட்டது என்று மன்னிப்பு கேட்க நட்சத்திரா நல்லவள் போல டிராமா போடுகிறாள். அந்த தீபாவை சும்மா விட கூடாது, அவளை கார்த்தியோட சேர விடாதீங்க என்று சொல்ல அபிராமி கொஞ்ச நாளில் அவளை வெளியே அனுப்பிடுவேன் அப்பறம் நீ தான் இந்த வீட்டு மருமகள் என்று சொல்கிறார்.


நட்சத்திரா இங்கயே தங்கட்டும் என்று  ஐஸ்வர்யா சொல்ல, செல்பி பாட்டி, மீனாட்சி, ஆனந்த் ஆகியோர் இது சரி வராது என்று சொல்ல அபிராமியும் நீ இங்க இருப்பது சரியா இருக்காது என சொல்லி நட்சத்திராவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். 


நீ எப்ப வேணாலும் இந்த வீட்டுக்கு வரலாம், ஆனால் நிரந்தரமாக தங்குவது எல்லாம் இப்போதைக்கு சரியா இருக்காது என்று சொல்ல நட்சத்திரா அதன் பிறகு கார்த்தியை சந்தித்து உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும், கண்டிப்பா இந்த தீபா வெளியே போனதும் உங்க மனைவியா நான் வருவேன் என்று சொல்லி விட்டு கிளம்பி செல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | உன் ராசி ரொம்ப நல்ல ராசி, நீ வந்த நேரம்...! கார்த்திகை தீபம் தீபாவிற்கு வரவேற்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ