அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ’மெர்சல்’ வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையினை கைப்பற்ற மூன்று முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் பலத்த போட்டி நிலவியது.


 



 


இறுதியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி வெற்றிபெற்றது. ரூ.28 கோடிக்கு இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் புரமோஷன் வேலைகள் விரைவில் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புரமோஷனில் கலந்து கொள்ள விஜய் விரைவில் சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.