Anna Serial Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக மாறிவிட்டன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்மையில் தொடங்கபிபட்ட சீரியல் தான் "அண்ணா". 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அண்ணா: கடைசி எபிசோட் தகவல்கள்


இதற்கு முந்தைய எபிசோடில், பாக்கியத்தின் முதல் மகன் முத்துப்பாண்டி அறிமுகம். போலீஸான முத்துப்பாண்டி ஆளில்லாத காட்டில் ஒரு அப்பாவியை ஓட விட்டு என்கவுண்டர் செய்ததான சர்ச்சை என பரபரப்பாக இருந்தது.



அண்ணா: இன்றைய எபிசோட்


குலதெய்வ கோவிலில் சௌந்தரபாண்டி குடும்பம், தங்கவேலு குடும்பம் மற்றும் சண்முகம் குடும்பம் என எல்லோரும் ஒன்று சேருகின்றனர்.


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: கைதாகும் சூர்யா.. அதிர்ச்சியில் சீதா, ஆட்டத்தை தொடங்கும் மகா!!


அதுமட்டுமல்லாமல் பரணிக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை செல்வத்தின் குடும்பத்தினரும் கோவில் திருவிழாவுக்கு வருகின்றனர்.



இப்படி அனைவரும் கோவிலில் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், செல்வம் பரணியை பார்த்துக் கொண்டிருப்பதால் அவள் தன்னுடைய அம்மாவிடம் இது பற்றி சொல்ல உங்க அப்பா அதுக்காகத்தான் அவனை வரச் சொல்லி இருக்காரு நீ எதையும் கண்டுக்காத என சொல்லி விடுகிறார். 


இதனையடுத்து பரணி செல்வத்தை வெறுப்பேற்ற சண்முகத்துடன் நெருங்கி பழக, சண்முகம் பரணியின் மீதான காதலை அதிகப்படுத்தி கொள்கிறான்.


இதை பார்த்த தமிழரசி கடுப்பாகி சண்முகத்தின் தங்கைகளிடம் நான்தான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணும், உங்கள அம்மா மாதிரி பார்த்துப்பேன் என பேச தங்கைகள் சண்முகம், பரணி ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கு என சொல்லி தமிழரசியை வெறுப்பேற்றுகின்றனர். 


மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!


அதன் பிறகு பரணி செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என சண்முகத்திடம் சொல்ல இந்த திருச்செந்தூரில் உங்க போனுக்கு சார்ஜ் போட இடம் இல்லையா கொடுங்க என வாங்கிக் கொண்டு சென்று ஒரு இடத்தில் சார்ஜ் போட கனெக்ஷன் சரியாக இல்லாததால் சார்ஜ் ஏறாமல் இருக்கிறது. 


இதனால் சண்முகம் என்ன பிரச்சனை என பார்க்க ஒயரில் கை வைக்க கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்படுகிறான். இதனால் எல்லோரும் பதறி போக பரணி முதல் உதவி செய்வதாக சொல்லி உதட்டோடு உதடு வைத்து மூச்சு கொடுக்க இதைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், சௌந்தர பாண்டி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட CWC புகழ்! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ