அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். நேற்றைய எபிசோடில் அமுதாவுக்காக கைதிகள் இன்ஸ்பெக்ட்டர் கழுத்தில் துப்பாக்கியை வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி


கைதிகள் துப்பாக்கியை எடுத்து இன்சை கழுத்தில் வைத்ததும்,கான்ஸ்டபிள் பிரஸ்காரங்க எல்லாரும் உள்ள வாங்க என சொல்ல, பிரஸ்காரங்க எல்லாரும் உள்ளே ஓடி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் பிரஸ்காரர்களிடம் இந்த பொண்ணு ஸ்கூல் பசங்களை அடிச்சிருக்கு, அது மட்டுமில்லாம இந்த பொண்ணு பசங்க கிட்ட போதை பொருள் வித்திருக்கு என சொல்லிக் கொண்டிருக்க, வெ்ளியே கார் வரும் சத்தம் கேக்க அனைவரும் வெளியே வந்து பார்க்கின்றனர்.


காரில் இருந்து ஜட்ஜ் இறங்க இதை பார்த்ததும் அமுதா முகம் மலருகிறது. ஜட்ஜ் இன்ஸ்பெக்டரிடம் எதுக்கும்மா இந்த பொண்ணை அரெஸ்ட் பண்ணிருக்கீங்க என கேக்க, இன்ஸ்பெக்டர் ஸ்கூல்ல உள்ள பசங்களை அடிச்சதோட மட்டுமில்லாம , பசங்களுக்கு போதை பொருள் சப்ளை பண்ணிருக்கா என சொல்ல, யாரு இந்த பொண்ணு போதை பொருள் குடுத்தாளா என்ன சாட்சி இருக்கு என கேக்க, இன்ஸ்பெக்டர் அமுதாவின் பேக்கை திறக்க அதில் போதைப் பொருள் இருக்கிறது.


ஜட்ஜ் இன்ஸ்பெக்டரிடம் யாரு கிட்ட காசு வாங்கி இப்படி சொல்ற என கேக்க, கைதிகள் சார் இந்த இன்ஸ்பெக்டர் இந்த பொண்ணு விஷயமா யார் கிட்டயோ போன்ல பேசிகிட்டே இருந்துச்சு சார், இந்த பொண்ணு பேக்குல செட்டப் பண்ணி போதை பொருளை வச்சிட்டாங்க சார் என சொல்கின்றனர். ஜட்ஜ் இன்ஸ்பெக்டரிடம் போனை குடும்மா என கேக்க, அவர் தயங்கி தயங்கி போனை குடுக்க, ஜட்ஜ் கடைசியாக டயல் செய்த நம்பருக்கு டயல் செய்து விட்டு அமைதியாக இருக்க, மாணவனின் அப்பா இன்ஸ்பெக்டர் என நினைத்து எல்லாத்தையும் முடிச்சிட்டியா, உனக்கு வரவேண்டிய மிச்ச பணம் வந்து சேரும் என சொல்கிறார். 


இதனையடுத்து ஜட்ஜ் இன்ஸ்பெக்டரிடம் என்னம்மா இது , ஒரு பொண்ணே இன்னொரு பொண்ணுக்கு இப்படி செய்யலாமா, உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும் என சொல்லிவிட்டு, அமுதாவை உடனே ரிலீஸ் பண்ணுங்க என உத்தரவிடுகிறார். அமுதா ஜட்ஜுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்புகிறாள். 


அடுத்து அமுதா சமாதிக்கு வர அன்னம், வடிவேலு, பரமு அவளை முறைத்துப் பார்க்க மாணிக்கம் அமுதாவை விளக்கு ஏற்ற சொல்ல அமுதா விளக்கேற்றுகிறாள். விளக்கு அணையாமல் இருக்க அமுதா நெகிழ்ச்சியுடன் கதிரேசனுக்கு நன்றி சொல்கிறாள். பாட்டி அமுதாவிடம் ஏண்டி லேட்டா வந்த என கோபப்பட மாணிக்கம் அவ ஏன் லேட்டா வந்தான்னு காரணம் கேக்கலாம்ல என சொல்ல, பாட்டி அமுதாவிடம் என்ன ஆச்சு சொல்லு என கேட்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ