அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 


இந்த சீரியலில் முந்தைய எபிசோட்டில் அமுதாவின் காதலை கணவனை காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டத்தையும் பார்த்து டாக்டர் செந்திலுக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | கேப்டன் அமெரிக்காவிற்கு கல்யாணம் ஆயிடுச்சா..? 26 வயது இளம் நடிகையை கரம் பிடித்த கிறிஸ் எவான்ஸ்!


அதாவது, டாக்டர் ஆபரேசன் தியேட்டரை ரெடி பண்ண சொல்ல அமுதா அன்னலட்சுமிக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள். பிறகு செந்திலுக்கு ஆபரேஷன் முடிய நர்ஸ் ஒருவர் உமாவுக்கு போன் செய்து ஆபரேஷன் முடிஞ்சு போச்சு என்னால ஒண்ணும் பண்ண முடியாது, டாக்டர் 4 மணி நேரம் கழித்து கண் கட்டை ஓபன் பண்ண சொல்லிருக்காரு, அப்ப கண் வெளிச்சம் படாம பார்த்துக்க சொல்லிருக்காரு என சொல்கிறாள்.



உடனே உமா வேறொரு திட்டம் போட்டு நர்சிடம் போட்டோ எடுக்கும் ப்ளாஷ் லட்டை கண் திறக்கும் போது அடிக்க சொல்கிறாள். அடுத்ததாக டாக்டர் செந்தில் கண் கட்டை அவிழ்க்க நர்ஸ் ப்ளாஷ் லைட்டை அடிக்க போக மாயா அதை பார்த்து விட்டு நர்சிடம் இருந்து ப்ளாஷ் லைட்டை வாங்கி அவளை திட்டுகிறாள். செந்தில் டாக்டரிடம் அமுதாவை தான் முதலில் பார்க்க வேண்டும் என்று சொல்லி கண் திறந்து அமுதாவை பார்க்க செந்திலுக்கும் மீண்டும் கண் தெரிய வருகிறது. 


அமுதா மாணிக்கத்திற்கு போன் செய்து செந்திலுக்கு கண் பார்வை சரியாகி விட்டதை சொல்ல பழனி உமாவிடம் கோபத்துடன் தண்ணீரை எடுத்து மேலே ஊற்ற சொல்கிறான். குமரேசன் அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாது, நமக்கு சந்தர்ப்பம் வரும் போது அந்த குடும்பத்தை வேரறுப்போம் என சொல்கிறார். 



இங்கே மாயா வீட்டிற்கு உமா வர உமா அவளிடம் யார் நீ, உனக்கும் அந்த குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்? ஒழுங்கா உண்மையை சொல்லு என மிரட்டுகிறாள். 


உமா மாயாவிடம் நீ பெரிய கோடீஸ்வரின்னு எனக்கு தெரியும், எதுக்கு நீ செந்திலுக்கு உதவி பண்ற , என்ன சம்மந்தம்னு மரியாதையா சொல்லு என கேக்க, மாயா அமைதியாகவே இருக்க, நீ என் கிட்ட உண்மையை சொல்லலேன்னா நான் அந்த வீட்டுல போய் நீ யாருன்னு உண்மையை சொல்லவா என சொல்லிவிட்டு நகர, மாயா உமாவை கூப்பிடுகிறாள். 


பிறகு மாயா உமாவிடம் தாலி செயினை எடுத்து காட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | மறக்கவே முடியாத ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி.. கடும் கோபத்தில் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ