அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா பஞ்சாயத்தை கூட்டிய செந்தில் மூலமாக தனக்கு ஒரு குழந்தை இப்பதாக அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | இசைக் கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடி.. ஏசிடிசி இயக்குநர் புதிய விளக்கம்


அதாவது, பஞ்சாயத்தார் பழனி, செந்திலிடம் பஞ்சாயத்தை கூட்டிட்டு நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா எப்படி என சொல்ல, மாணிக்கம் அந்த பொண்ணு கிட்ட என்ன ஆதாரம் இருக்கு என கேட்க மாயா இந்த ஊர்ல அம்மனுக்கு மிளகா அரைச்சி பூசுனா பொய் சொன்னவங்க உடம்பு எரியும்ல, செந்திலை மிளகா அரைச்சு பூச சொல்லுங்க என சொல்ல, பஞ்சாயத்தார் நீயும் செந்திலும் நாளைக்கு அம்மனுக்கு மிளகா அரைச்சு பூசனும் என தீர்ப்பு சொல்கின்றனர்.



உமா மாயாவிடம் நீ பாட்டுக்கு மிளகா அரைச்சு பூசுறதுக்கு ஒத்துகிட்ட என கோபமாக கேக்க, மாயா அவளிடம் நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறீங்களா, நான் சொல்றது எல்லாம் உண்மை என சொல்ல உமா மாயாவிடம் உன்னை நான் நம்புறேன் உனக்கு எப்பவும் நான் துணை இருப்பேன் என சொல்கிறாள். 



இங்கே மாணிக்கம் செந்திலிடம் இது அமுதாவோட வாழ்க்கை பிரச்சனை  உண்மையை சொல்லு என கேட்க வடிவேலு செந்தில் தப்பு பண்ணிருப்பான் என சொல்ல, மாணிக்கம் வடிவேலுவை திட்ட செந்தில் நான் ஒரு தப்பும் பண்ணல மாமா, எதுக்காக அவ பேரை மாத்திகிட்டு இப்படி பண்றான்னு தெரியலை என சொல்கிறான். அமுதா செந்திலை நம்புவதாக சொல்லி கொண்டிருக்க செல்வா வீட்டிற்கு வந்து என்ன விஷயம் என கேட்க மாணிக்கம் நடந்தவற்றை சொல்கிறார். 


அடுத்து செல்வா மாயா வீட்டிற்கு வந்து மாயாவை அடித்து யாரு சொல்லி நீ இப்படி பண்ற என கேட்டுக் கொண்டிருக்க, அமுதா தடுத்து நிறுத்துகிறாள். பிறகு அம்மன் கோவில் முன் அனைவரும் கூட மாயாவும் அமுதாவும் மிளகாயுடன் வருகின்றனர். மாயா சாமி கும்பிட்டு நான் நிரூபிப்பேன் மிளகாய் அரைத்து அம்மன் மேல் பூச மாயாவுக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கிறது. மேலும் மாயா இன்னும் நான் எவ்வளவு நேரம் நிக்கனும், நாள் பூரா நின்னாலும் என் உடம்பு எரியாது என தீர்க்கமாக சொல்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


 மேலும் படிக்க | டும் டும் டும்..! கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமண புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ