ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்று வெற்றி அடிதடிக்கு போன விஷயம் சக்திக்கு தெரிய வந்த நிலையில் இது நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்


அதாவது, வெற்றி அடிதடிக்கு போனால் சக்தி கலெக்டர் ஆக முடியாது என்பதை தெரிந்து கொள்ளும் புஷ்பா இதை வைத்து ஏதாவது பண்ணலாம் என்று யோசிக்கும் போதே காந்தாரா சிறையிலிருந்து வெளிவரும் விஷயம் புஷ்பாவுக்கு தெரிய வருகிறது. 


காந்தாரா வெளியே வந்தால் அவள் ரங்கநாயகியை எப்படியும் ஏதாவது செய்வாள், அதை பார்த்துக் கொண்டு வெற்றி சும்மா இருக்க மாட்டான், எனவே வெற்றி தானாக ஜெயிலுக்கு போவான் என்று புஷ்பா கணக்கு போடுகிறாள்.


சிறையில் இருந்து வெளியாகும் காந்தாரா ரங்கநாயகி மேலுள்ள பழைய பகை காரணமாக நேராக ரங்கநாயகி வீட்டுக்கு வந்து அவளையும் அவள் குடும்பத்தையும் கொல்லப் போவதாக சவால் விடுகிறாள். பதிலுக்கு ரங்கநாயகி நாளை மாலை 7 மணிக்குள் என் மகனே உன்னை ஊரை விட்டு விரட்டுவான் என்று சவால் விடுகிறாள்.


ரங்கநாயகி வெற்றியிடம் என்ன ஆனாலும் நீ அவளை அடித்து துரத்த வேண்டும் என்று சொல்ல, மீனாட்சி அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்ல, நான் சொன்னதை செய்தே ஆக வேண்டும் அவன் எனக்கு மகனா உங்க வீட்டு மாப்பிள்ளையா என்று பார்த்துவிடலாம் என்று சவால் செய்துவிட்டு போகிறாள் ரங்கநாயகி. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ