மிஷ்கின்-சாந்தனு கூட்டணியில் இணையும் பிரபல நாயகிகள்!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகைகள் நித்தயா மேனன் மற்றும் சாய்பல்லவி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகைகள் நித்தயா மேனன் மற்றும் சாய்பல்லவி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிசாசு, யுத்தம் செய், அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற எதிர்பார்க முடியாத திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாரிகிவிட்டார் என தெரிகிறது. அவரது அடுத்த படைப்பினில் திரைகதை வித்தகர் பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க உள்ளார் என தெரிகிறது.
சுட்ட கதை, நலனும் நந்தினியும், நட்புனா என்னானு தெரியுமா படங்களை தயாரித்த லிப்பிரா ப்ரடக்ஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்க உள்ளது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த தகவலினை உறுதி படுத்தும் விதமாக நடிகர் சாந்தனுவும், தனுத ட்விட்டர் பக்கத்தினில், இக்குழுவினர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றினை "My New Birth, Bless Me" என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை நித்யா மேனன் மற்றும் சாய் பல்லவி இணைகின்றனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது!