‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகை! யார் தெரியுமா?

Wed, 10 Apr 2024-1:12 pm,

படையப்பா படத்தில், விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பஞ்ச் வசனங்கள் இருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட ரஜினிகாந்தின் படங்களுள் முக்கிய இடத்தை பெற்றது படையப்பா. 

விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா, இதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்த்ரா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க சிம்ரனை அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியாமல் போனதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 

படத்தின் முதல் பாதியில் இளமை தோற்றத்திலும், இரண்டாம் பாதியில் கம்பீரமான வயதானவர் தோற்றத்திலும் நடித்திருப்பார் ரஜினிகாந்த்.

படையப்பா படத்தில், ரஜினிகாந்திற்கு இணையாக பேசப்பட்ட இன்னொரு கதாப்பாத்திரம் நீலாம்பரி. இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவர், ரம்யா கிருஷ்ணன். 

ரம்யா கிருஷ்ணனின் திமிரான பார்வையும், வசன உச்சரிப்பும், ஆக்ரோஷமான நடிப்பும் இன்றும் படையப்பா படத்தை பார்க்கும் போதெல்லாம் மயிர்கூச்சரிய செய்யும். 

ரம்யா கிருஷ்ணனுக்கு முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நக்மாவையும், மீனாவையும் அழைத்தாராம் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ஆனால், நக்மா வேறு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டதால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். நடிகை மீனா, தானும் ரஜினியும் ஜோடியாக நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், ரஜினிக்கு எதிராக நெகடிவ் ரோலில் நடித்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினாராம். இதையடுத்துதான் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரியாக நடிக்க வைத்துள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link