மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்குமா

Fri, 11 Oct 2024-12:57 pm,

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இதனுடன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதளுக்கு இன்னும் சில மகிழ்ச்சியான அப்டேட்களும் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 3%-4% அத்கரிக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வரலாம். இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53%-54% அதிகரிக்கும். 

அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை மாதம் முதலான டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் அடுத்த மாத சம்பளத்தில் அவர்கள் மிகப்பெரிய தொகையை பெறக்கூடும். 

இதற்கிடையில், மற்றொரு முக்கியமான அப்டேட்டும் கிடைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகையை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகையின் பரிசாக இது கிடைக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

முன்னதாக, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நாடு எதிர்கொண்ட நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகையை வெளியிடுவது குறித்து அரசாங்கம் எதுவும்  பரிசீலிக்கவில்லை என்று கூறியிருந்தார். எனினும், தசரா பண்டிகையை முன்னிட்டு 70 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த நிதியை வழங்க மத்திய அரசு தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அரசாங்கம் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தீபாவளிக்கு முன்னதாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.  

சம்பள உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது திருத்தப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் இதில் திருத்தம் செய்யப்படுகின்றது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சூத்திரம்: [(அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) கடந்த 12 மாதங்களின் சராசரி – 115.76)/115.76]×100 / பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கணக்கீடு: (கடந்த 3 மாத நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)- 126.33 ))x100.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link