அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அசத்தல் அப்டேட்: அகவிலைப்படி உயர்வு... நாளை அறிவிப்பா?

Tue, 08 Oct 2024-9:13 am,

 மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது நடக்கும்? இதற்கான லேட்டஸ் அப்டேட் என்ன?

மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அரசு விரைவில் நல்ல செய்தியை வெளியிட உள்ளதாக கூறப்படுகின்றது. தீபாவளிக்குள் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) அதிகரித்த ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை பெறுவார்கள்.

அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் டிஏ -வை (DA) இரண்டு முறை அதிகரிக்கிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அதிகரிப்பு செய்யப்படுகின்றது. ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் டிஏ உயர்வு (DA Hike) தீர்மானிக்கப்படும். 

தீபாவளிக்கு முன்னதாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பரிசாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இருக்கும். 

2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில்  ஜூலை 2024 அகவிலைப்படி 3%-4% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் (DA) 53%-54% ஆக அதிகரிக்கும்.

அக்டோபர் மாதம் 9ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளிவரக்கூடும் என கூறப்படுகின்றது. எப்படியும், தீபாவளி பண்டிகைக்கு முன்பே அரசு ஊழியர்களுக்கு இந்த பரிசு கிடைக்கும். ஜூலை முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.

சம்பள உயர்வு: சம்பள உயர்வு கணக்கீடு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.

சம்பள உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.  

ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வூதியம் பெறுபவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 எனில், அவருக்கு 50 சதவீதத்தின்படி ரூ.12,500 அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படி 53% ஆக அதிகரித்தால், அவருக்கு ரூ.13,250 கிடைக்கும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகின்றது. இது பிப்ரவரி 28, 2014 அன்று உருவாக்கப்பட்டது. ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை 19 நவம்பர் 2015 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 2016ஆம் ஆண்டு அரசு அமல்படுத்தியது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link