மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரிக்கு முன் தீபாவளி: அதிரடி டிஏ ஹைக்.... எப்போது, எவ்வளவு?

Sat, 21 Sep 2024-9:01 am,

ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் ஏற்படவுள்ளது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இதற்காக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. நவராத்திரிக்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு வெளிவரலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக ஜனவரி மாதத்துக்கான டிஏ ஹைக் மார்ச் 2024 -இல் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு இந்த மாதம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திருத்தம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திற்கான பெரிய நிவாரணமாக அமையும்.

சம்பள உயர்வு: வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் செய்யப்படுகின்றது. ஜனவரி மாதத்துக்கான டிஏ ஹைக் கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபஐ எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றது.

ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில், ஜூன் ஏஐசிபிஐ குறியீட்டில் (AICPI Index) 1.5 புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -இல் 3%-4% டிஏ உயர்வு (DA Hike) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஏ 3% அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Alowance) 53% ஆக அதிகரிக்கும். இது 4% உயர்ந்தால், டிஏ மற்றும் டிஆர் 54% ஆக உயரும். எப்படியும் இந்த முறை ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு காத்திருக்கின்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 25-ம் தேதி அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். எப்படியும் நவராத்திருக்கு முன் ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

சம்பள உயர்வு கணக்கீடு: அகவிலைப்படி 3% அதிகரித்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒர் உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியர் மாத சம்பளமாக ரூ. 50,000 பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அதிகரிப்புக்கு பின்னர் அவரது மாத சம்பளத்தில் தோராயமாக சுமார் ரூ.1,500 அதிகரிப்பு இருக்கும். அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.18,000 அதிகரிப்பு இருக்கும்.

இதற்கு முன்னர் 7வது ஊதியக் குழுவின் படி, ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Dearness Relief) 4% அதிகரித்தது. இதன் பிறகு அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தன. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது.  

இது தவிர மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் ஏற்றத்தைக் கொண்டு வரும் என்றும் கூறப்படுகின்றது. அதற்காக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக அதிகரிக்கப்படலாம். 

அகவிலைப்படி ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு முக்கிய அலவன்சாக பார்க்கப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் அவ்வப்போது அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) ஆகிய இரு தரப்பிற்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைகின்றது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு: டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI - 115.76)/115.76] x 100; பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான சராசரி AICPI - 126.33)/126.33] x 100. இங்கு, AICPI என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link