தீபாவளிக்கு பிறகு இந்த 4 ராசிகளின் வாழ்க்கை பொன் போல் ஜொலிக்கும்

Thu, 29 Sep 2022-10:49 am,

குரு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தின்படி, நவக்கிரகங்களும் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன. கிரகங்களின் நிலையில் ஒரு சிறிய மாற்றம் கூட 12 ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். தீபத்திருநாளான தீபாவளிக்குப் பிறகு வியாழன் மார்கியாக மாறும். 12 ராசிகளில் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை வீசும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்...

ரிஷப ராசி: வியாழன் கிரகம் ரிஷப ராசியின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் தொழில் துறையிலும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் புதிய வருமானங்கள் உருவாகும். இதன் மூலம் வியாபாரத்திலும் லாபம் ஈட்டலாம். அதுமட்டுமின்றி நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மிதுன ராசி: வியாழன் மிதுன ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த வியாழன் சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் அதிக ஆர்டர்களைப் பெற்று நல்ல லாபம் ஈட்டுவார்கள்.

கடக ராசி: வியாழன் கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார், இதன் காரணமாக நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு மார்கி வியாழன் நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பார். தொழில் பயணங்கள் நல்ல லாபத்தை தரும். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

கும்ப ராசி: வியாழன் கும்பத்தின் இரண்டாவது வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link