இந்த சூப்பர் ஃபுட்களை நீங்கள் சரியான முறையில் சாப்பிடுகிறீர்களா?

Tue, 27 Jun 2023-5:00 pm,

சூப்பர் உணவுகள்: பாதாம், குயினோவா, ஆப்பிள், ப்ரொக்கோலி, பருப்பு வகைகள் பிரபலமான சூப்பர் உணவுகளில் குறிப்பிடத்தக்கவை. இவற்றை உட்கொள்ளும் சரியான முறை பற்றி இங்கே காணலாம்.

பாதாம்: பாதாம் மிகவும் சத்தான மற்றும் நல்ல சிற்றுண்டி விருப்பமாகும். ஆனால் அவற்றை ஊறவைப்பது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை இன்னும் அதிகரிக்கிறது. பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைப்பது பைடிக் அமிலத்தை உடைக்க உதவும் என்சைம்களை செயல்படுத்துகிறது. இதனால் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதிகரிக்கின்றன. 

குயினோவா: இது ஒரு சிறந்த பசையம் இல்லாத தானியமாகும். ஆனால் பலர் சமைப்பதற்கு முன்பு அதைக் கழுவுவதைத் தவிர்க்கிறார்கள். இதில் இயற்கையாகவே உள்ள சபோனின்கள் எனப்படும் கசப்பான பூச்சு சுவை மற்றும் செரிமானத்தை பாதிக்கும். குயினோவாவை சிறிது நேரம் ஊறவைப்பது சபோனின்களை திறம்பட நீக்குகிறது. 

ஆப்பிள்: இன்றும் ஆப்பிளின் தோலை நீக்கி உண்பவர்கள் அதிகம். ஆனால் அவ்வாறு செய்வதால் முழுமையான பலன் கிடைப்பதில்லை. ஆப்பிள் தோல்களில் நார்ச்சத்து, ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் பிற நன்மை பயக்கும் கலவைகள் உள்ளன. ஆப்பிளை தோலுரிப்பதற்கு பதிலாக, அதை நன்றாக கழுவி, தோலுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியை வதக்கி, வேகவைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, ஆவியில் சமைப்பது சிறந்தது. வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் போன்ற சரியான ஊட்டச்சத்துக்களை அதிகபட்சமாக தக்கவைக்க ஆவி வேகவைப்பது உதவுகிறது. ப்ரோக்கோலியை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்.

முளை கட்டிய பயறுகள்: டப்பாக்களில் அடைத்து பதப்படுத்தப்பட்ட பருப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இதில் உப்பும், ப்ரிசர்வேட்டிவ்களும் அதிகம் இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கண்டறிந்துள்ளது. முளை கட்டிய பயறுகளை கடைகளில் பாக்கெட்டுகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே தண்ணீரில் ஊறவைத்து, முளை கட்டிய பின்னர் உட்கொள்ளலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link