பிடரி போல் தலைமுடி வளர... அதிகம் உதவும் எது? நெல்லிக்காய் vs கற்றாழை நன்மைகள்

Thu, 05 Sep 2024-8:19 pm,

ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு பல்வேறு இயற்கை சார்ந்த தீர்வுகளும், வீட்டு வைத்தியங்களும் இருக்கின்றன. அதில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஆகியவை தவிர்க்க முடியாதவை.

 

இருந்தாலும், ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பதை இங்கு காணலாம். 

 

நெல்லிக்காய் (Amla) முழுவதும் ஆண்டிஆக்ஸிடன்ட்களும், வைட்டமிண்களும் நிறைந்திருக்கின்றன. இதன் தலைமுடி வளர்ச்சிக்கும், வேர் வரையிலும் தாக்கம் செலுத்தக் கூடியவை ஆகும். இதனால் தலைமுடி வலுவாகி, முடி உடைதலும், தலைமுடி இரட்டிப்பாவதும் தடுக்கப்படும். 

 

தொடர்ந்து பயன்படுத்துவதால் அடர்த்தியானதலைமுடி வளர்ச்சியும், நீளமான முடியையும் பெறுவீர்கள். இதிலும் நல்ல பளபளப்பு உண்டாகும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். 

 

கற்றாழையில் (Aloe Vera) அதிக நீர்ச்சத்து இருக்கிறது. அதன் ஜெல் போன்ற தன்மையால், நீங்கள் தலையில் இதை தேய்த்துக்கொள்ளும்போது அதிக ஈர்த்தன்மையையும், குளிர்ச்சியையும் தரும். அது காய்ந்தால் கூட உங்களுக்கு இதமளிக்கும்.  

 

கற்றாழையை பயன்படுத்துவதால் தலைமுடி மிருதுவாக மாறும். பட்டு போன்று தோற்றமளிக்கும். நல்ல ஈர்த்தன்மையுடன் பளபளப்பாக காட்சியளிக்கும். கற்றாழையால் தலையில் ஏற்படும் அரிப்புகள் மற்றும் எரிச்சல்கள் அடங்கும். கற்றாழையை நீங்கள் வீட்டிலேயே வளர்த்து அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். 

 

இரண்டையும் ஒப்பிடுகையில், கற்றாழையை விட நெல்லிக்காய் அதிக ஆண்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருப்பதால் தலைமுடி வளர்ச்சிக்கு கூடுதல் நன்மை அளிக்கும். இருப்பினும், தலைமுடியை இதமாக வைத்திருக்க கற்றாழையை பயன்படுத்துங்கள். உங்கள் தேவையை பொறுத்து இதில் எவை உங்களுக்கு சிறந்தவை என நீங்களே தேர்வுசெய்து கொள்ளலாம். 

 

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. தலைமுடி வளர்ச்சி குறித்த சந்தேகங்களுக்கு உரிய வல்லுநரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும், இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link