செல்வமகளின் அருளைப் பெற சுலபமான பழக்கவழக்கங்கள்! பணதட்டுப்பாட்டை நீக்கும் வழிபாடு!

Fri, 30 Aug 2024-7:24 am,

வாழ்க்கையை நிம்மதியாக வாழ இறையருள் தேவை. இறையருள் இருந்தால், வாழ்த்தைக்குத் தேவையான வளங்கள் அனைத்தும் தடையறக் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது பணம் என்றாலும், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல, கடவுளின் ஆசியே அனைத்திற்கும் அடிப்படையாகிறது  

இறையருள் பெறவும், நிம்மதியாய் வாழவும் தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புரிதல் ஆளுக்கு ஆள், வாழும் விதம் என பல விஷயங்களின் அடிப்படையில் மாறுபடும். இருப்பினும், சில பொதுவான வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்...

வீட்டில் தொடர்ந்து செல்வமும், நிம்மதியும் வந்து சேர்வதற்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் தேவை. வருமானத் தடைகள் நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வ மழை பொழிய செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைத் தெரிந்துக் கொள்வோம்

பிரம்ம முகூர்த்தத்தில் விடியலில் எழுபவர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும், காலையி எழுந்ததும், விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நாளடைவில் வந்து சேரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாவிட்டாலும், சூரிய உதயம் ஆன பிறகாவது எழுந்து விளக்கேற்ற வேண்டும்

காலையில் எழுந்தவுடன், வாசல் கூட்டி பெருக்கி, கோலம் போட்டுவிட்டு, பூஜை அறையில் அன்னை லட்சுமியின் முன் பணத்தை வைத்து வணங்க வேண்டும்

பணத்துடன், மணம் தரும் மல்லிகைப்பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.  

மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக விளக்கேற்றி வழிபட வேண்டும். இது, அன்னை லட்சுமியின் அருளைத் தரும் சுலபமான வழிபாடு... தடையின்றி தனம் பெற எளிமையான வழிபாடு...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link