மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட தங்கம்... சிக்ஸர் மழையால் திணறிய மைதானம் - யார் இவர்?

Sun, 24 Mar 2024-5:49 pm,

17ஆவது ஐபிஎல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று போட்டிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே, மூன்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் சென்னை அணி ஆர்சிபி அணியையும், பஞ்சாப் அணி டெல்லி அணியையும், கொல்கத்தா ஹைதராபாத் அணியையும் வீழ்த்தி இருக்கின்றன. 

 

 

இதில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது. இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாகவே விளையாடியது, கடைசி பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது ஹைதராபாத் வெற்றியை கோட்டைவிட்டது. கொல்கத்தாவின் வெற்றிக்கு பலரின் பங்கேற்றிருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்டர் ரமன்தீப் சிங் முக்கியமானவர். அவர் குறித்து இத்தொகுப்பில் காணலாம். 

 

சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதீஷ் ராணா என டாப் ஆர்டர் வீரர்கள் ஆட்டமிழந்தபின் ரமன்தீப் சிங் களமிறங்கி 17 பந்துகளில் 35 ரன்களை அடித்து மிரட்டியிருப்பார். அதில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடக்கம். வெற்றிக்கு பின் பேசிய அவர் தன்மீது நம்பிக்கை வைத்து களமிறக்கிய கௌதம் கம்பீருக்கும், அபிஷேக் நாயருக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி இதேபோலவே தொடர்ந்து விளையாட ஆசைப்படுவதாக தெரிவித்தார். 

முன்னதாக, மினி ஏலத்தை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்த 11 வீரர்களில் ரமன்தீப் சிங்கும் ஒருவர். இவர் கடந்தாண்டு மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். எகானமி 9 ஆகும். ஆல்-ரவுண்டரான இவரை மும்பை விடுவிக்க, கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி அவரின் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு கொக்கிப் போட்டு தூக்கியது.

 

ரமன்தீப் சிங் முதல்தர போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். 2023 சயீத் முஷ்டாக் டி20 லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பஞ்சாப் அணிக்கும் இவர் பெரும் பங்காற்றினார். பேட்டிங்கில் 7 இன்னிங்ஸில் 127 ரன்களை 31 ரன்கள் சராசரியில் எடுத்தார். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக அதிகபட்சமாக 42 ரன்களையும் குவித்திருந்தார்.  

 

2022-23 விஜய் ஹசாரா தொடரில் பஞ்சாப் அணிக்காக அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிடைப்பது அரிது என்பதை புரிந்துகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை அணிக்குள் எடுத்தது. 

 

இருப்பினும், ரமன்தீப் சிங் பந்துவீச்சை விட பின்வரிசையில் ரின்கு சிங், ரஸ்ஸலுக்கு முன் சென்று சிக்ஸர்களை பறக்கவிடுவதை மட்டும் இவரின் பணியாக கொடுத்து Impact Player ஆகவே பயன்படுத்தியது. இந்த பணியை ரமன்தீப் சிங் சிறப்பாக செய்யும்பட்சத்தில் கேகேஆர் நிச்சயம் பிளேஆப்பை தொடும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link