12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராகு சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளால் பொற்காலம்

Fri, 26 Jan 2024-2:32 pm,

அனைத்து கிரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இப்படி கிரகங்கள் மாறும்போது சில சூழ்நிலைகளில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைந்திருக்கும் நிலையும் உருவாகிறது. ​​

இரண்டு கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் மாதத்தில் மீனத்தில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கவுள்ளது. ராகு தற்போது மீனத்தில் இருக்கிறார். சுக்கிரன் மார்ச் மாதத்தில் தனது உச்ச ராசியான மீனத்தில் பெயர்ச்ச்சி ஆகவுள்ளார்.

ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், மூன்று ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த சேர்க்கையின் பலனால், இந்த ராசிக்காரர்களுக்கு அன்னை மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த இரு கிரகங்களின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு மற்றும் சுக்கிரன் இணைவதால் ஏற்படும் சுப பலன் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வருமானம் மற்றும் லாபத்தின் இடத்தில் இந்த இணைப்பு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த நேரத்தில் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இந்த காலகட்டத்தில் அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல சேமிப்பையும் செய்ய முடியும்.

 

மிதுனத்தின் கர்ம வீட்டில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உருவாகப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கலவையானது அதிகப்படியான நற்பலன்களை வழங்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பெரும் லாபம் ஈட்டுவீர்கள். நீங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால் இந்த காலகட்டத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும்ம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் திடீர் பண ஆதாயம் கூடும்.

ஜோதிட சாஸ்திரப்படி நான்காம் வீட்டில் ராகுவும் சுக்கிரனும் இணைவது தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் பொருள் மகிழ்ச்சியைப் பெறப் போகிறீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பொருளாதார முன்னேற்றம் காரணமாக முன்னேற்றம் காணலாம். நீங்கள் சொத்து வங்கி விற்கும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வேலையில் லாபம் பெறலாம். இந்த காலக்கட்டத்தில் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link