சனிப்பெயர்ச்சிக்கு பிறகு இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்: அருள் மழை பொழிவார் சனிபகவான்

Thu, 05 Jan 2023-3:28 pm,

ஜாதகத்தின் லக்னம் அல்லது சந்திரனில் இருந்து முதல், நான்காம், ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டில் சனி அதன் உச்சமான மகரம், கும்பம் அல்லது துலாம் ராசியில் இருக்கும்போது ஷஷ யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். அடுத்த வருடம் வியாழன் மேஷ ராசியில் இருப்பார். மேஷ ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், செல்வம் தொடர்பான உங்கள் அதிர்ஷ்டம் மாறப்போகிறது. இந்த காலத்தில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்க முழு வாய்ப்பு உள்ளது.

ஜனவரி மாதம் சனி ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரம் காரணமாக பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். இந்த ராசியின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதியாக சனி கருதப்படுகிறார். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் நடந்துமுடியும். 

சனி உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்தின் போது தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து பூரண விடுதலை பெறுவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இது உங்கள் இயல்புடன் உங்கள் அதிர்ஷ்டத்தையும் மாற்றும். இந்த பெயர்ச்சிக்கு பிறகு நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link