சனி வக்ர நிவர்த்தியால் உருவாகும் மகாபுருஷ ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு புகழ் சேரும்

Sat, 05 Nov 2022-6:41 pm,

சனியின் சஞ்சாரம் காரணமாக உருவாகும் இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இந்த ராசிக்காரர்கள் தொழில், பணம், உறவுகள், உடல்நலம் போன்ற விஷயங்களில் பெரிதும் பயனடைவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு வக்ர நிவர்த்தி அடைந்துள்ள சனி பகவான் சுப பலன்களைத் தருவார். அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த நேரத்தில் அனைவரின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கத் தொடங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

சனி பகவானின் நேரடி சஞ்சாரம் தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். வேலை-வியாபாரத்தில் இதுவரை காத்திருந்த முன்னேற்றம் இப்போது கிடைக்கும். இந்த காலத்தில் அதிக பணம் ஈட்டுவீர்கள். 

மகர ராசியிலேயே சனிபகவான் இடம் பெயர்ந்துள்ளார். ஆகையால், மகர ராசிக்காரர்கள் சனியின் நேரடி சஞ்சாரத்தால் அதிக பலன்களைப் பெறக்கூடும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link