மழையில் கார் ஓட்டும் போது இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!

Mon, 01 Jul 2024-5:31 pm,

தற்போது வெயில் காலம் முடிந்த மழைகாலம் துவங்கி உள்ளது. மழையில் கார் ஓட்டுவது மிகவும் கடினமான ஒன்று. எனவே அத்தியாவசிய உபகரணங்களை வைத்து கொள்ள வேண்டும்.

மழை காலங்களில் காரை வெளியில் நிறுத்தி இருந்தால் முடிந்தவரை நல்ல தரமான கவரை பயன்படுத்துவது நல்லது. இது காரை துருபிடிக்காமல் பாதுகாக்கிறது.

சேறு மற்றும் சகதிகள் நிறைந்த சாலையில் பயணம் செய்து இருந்தால், உடனே காரை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அழுக்கு படிந்து சக்கரங்கள் எளிதியில் துருபிடிக்கலாம்.

மழைக்காலத்தில் எப்போதும் ஜன்னல்கள் மூடியே இருக்கும் என்பதால், மழை இல்லாத சமயத்தில் ஜன்னல்களை திறந்து வைப்பது நல்லது. அதே சமயம் காருக்குள் கொசு சேராமலும் பார்த்து கொள்ள வேண்டும்.

அதே போல காரின் ஜன்னல்களை நன்கு சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். மழை மற்றும் வெயில் காரின் ஜன்னல்களில் நேரடியாக படுவதால் பழுதாக வாய்ப்புள்ளது.

 

மழைக்காலத்தில் காரின் உட்பகுதியும் அதிகம் அழுக்காகிறது. சகதி மற்றும் மண் போன்றவரை ஒட்டிக்கொண்டு கார் முழுவதும் படிக்கிறது. எனவே நல்ல தரை விரிப்பை காரில் பயன்படுவது நல்லது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link