சனி வக்ர நிவர்த்தி... ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபடும் ‘சில’ ராசிகள்!

Sun, 05 Nov 2023-11:58 pm,

ஜோதிடத்தின் படி, சனி தேவரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் சனியின் ஏழரை நாட்டு சனி அல்லது சனி திசை போன்ற தாக்கங்கள் சில ராசிகளில் தொடங்கி, அவற்றின் தாக்கம் சில ராசிகளில் முடிவடைகிறது. 

சனி தேவன் ஜூன் 2023 வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்தார். இதன் காரணமாக, சில ராசிக்காரர்களுக்கு சனிதேவரின் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசையின்ன் வேதனையான கட்டம் முடிந்தது.

 

சனியின் வக்ர நிவர்த்தியினால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இனிஅதிர்ஷ்டம் வரும். மேலும், அவர்களின் செல்வம் பெருகும். இந்த ராசிகள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம்...

சனிதேவரின் வக்ர நிவர்த்தியினால், கடகம் மற்றும் விருச்சிக ராசிகளின் வேலைகள் இனி நடக்கத் தொடங்கும். உங்கள் வாழ்க்கையில் இருந்த மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள். அங்குதான் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். நீங்கள் வேலை அல்லது வணிக காரணங்களுக்காகவும் பயணம் செய்யலாம். எது சுபமாக இருக்கும்.

 

சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், இனி மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி என்ற தொல்லை காலம் முடிந்து விட்டது. இரண்டாம் கட்டம் கும்ப ராசியிலும், மூன்றாம் கட்டம் மகர ராசியிலும் நடக்கிறது. எனவே சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால் மீனம், கும்பம், மகரம் ராசிக்காரர்கள் நிம்மதி பெறுவார்கள்.

சனிபகவானின் வக்ர பெயர்ச்சியினால், மீனம், கும்பம், மகரம் ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது எதிர்பாராத பண ஆதாயங்களும் அவ்வப்போது கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தாலும், மீனம், கும்பம், மகரம் ராசிக்காரர்கள் இன்னும் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் சனிக்கிழமையன்று சனி கோவிலுக்குச் சென்று சனி சிலையின் முன் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சனி சாலிசாவையும் பாராயணம் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link