இந்த 5 பேர் தான்! ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே தக்க வைக்க போகும் வீரர்கள்!

Sun, 22 Sep 2024-2:39 pm,

ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக பட்டத்தை வென்றது. தற்போது 43 வயதான தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். சீசன் முழுவதும் ஒரு வீரராக மட்டுமே செயல்பட்டார் தோனி. 

 

2025 ஐபிஎல் மெகா ஏலம் வர உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்க தயாராக உள்ளது. மேலும் ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைக்க உள்ளது.

 

எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை பிசிசிஐ தற்போது வரை வெளியிடவில்லை. எனவே அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து சிஎஸ்கே-வின் முடிவு மாறலாம்.

 

5 ஆண்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை அணியில் தக்கவைத்துக்கொள்ளும் பழைய விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்தால் சிஎஸ்கே-விற்கு சாதகமாக இருக்கும்.

 

மேலும் சமீர் ரிஸ்வி போன்ற இளம் வீரர்களை சென்னை அணி தக்க வைக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link