நெஞ்சு வலி வந்தால் ஜாக்கிரதை: இந்த நோய்களின் அறிகுறியா இருக்கலாம்

Wed, 24 May 2023-3:44 pm,

நிமோனியா: நிமோனியா இருந்தாலும் நெஞ்சு வலி ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிமோனியா காரணமாக, நுரையீரலில் காற்றின் சப்ளை அதிகமாகிறது. இதனால் இருமலுடன் நெஞ்சு வலியும் ஏற்படத் தொடங்குகிறது. நிமோனியா பெரும்பாலும் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகின்றது.

கோஸ்டோகாண்ட்ரிடிஸ்: மார்பு வலிக்கான காரணம் கோஸ்டோகாண்ட்ரிடிஸ் என்ற நோயாகவும் இருக்கலாம். இதில் விலா எலும்புகள் வீங்கி கடுமையான வலி ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், இந்த வலியை மாரடைப்பு அல்லது வாயு என்று தவறாக நினைக்கக்கூடாது.

ஆஞ்சினா: மார்பு வலி ஆஞ்சினாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த நோய் வரும்போதெல்லாம் இதயத்தில் ரத்தத்தின் தாக்கம் குறையும். இதனால் நெஞ்சு வலி பிரச்சனை ஏற்படும். மருத்துவ மொழியில் இது இஸ்கிமிக் மார்பு வலி என்றும் அழைக்கப்படுகிறது.

பேனிக் அட்டாக்: பீதி தாக்குதலும் மார்பு வலியை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எப்போது வேண்டுமானாலும் பீதி தாக்குதல் வரலாம். இது மிகவும் ஆபத்தானது. ஆகையால் இந்த பிரச்சனை வந்தால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆசிட் ரிஃப்ளக்ஸ்: சில சமயங்களில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மூலமாகவும் நெஞ்சு வலி ஏற்படுகிறது. அமிலம் உடலின் உணவுக்குழாயில் நுழைகிறது. இந்த வகையான பிரச்சனையில் வயிற்று வலியும் ஏற்படலாம். இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link