அல்சைமர் நோயை விரட்டும் தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காய்!

Wed, 12 Oct 2022-8:51 pm,

எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய தேங்காயின் தாய் பாலின் சத்துக்களும் உள்ளது என கூறப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர்.  தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சைமர்  நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. காரணம் தேங்காயில் உள்ள நிறைவுறு கொழுப்பு அமிலங்கள், மற்ற நிறைவுறு கொழுப்புகளை போல் இல்லாமல் அதில் உள்ள சங்கிலி தொடர் நடுத்தரமான அளவில் உள்ளது. இந்த கொழுப்பு சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

தேங்காய் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக்.  இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும், அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் மலச்சிக்கலை போக்கும். வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன. தேங்காயில் வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கும் மோனோ லாரின் உள்ளது.

தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link