ICG on Colombo Ship fire: தணிந்தது தீ, எண்ணெய் கசிவு இல்லை

Sat, 29 May 2021-7:28 am,

இரண்டு இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் இலங்கை கப்பல்களின் முயற்சியால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இரவு பகலாக தொடர்ந்த தீயணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV X-Press Pearl)  சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ கணிசமாகக் குறைந்துள்ளது. 

ஐ.சி.ஜி டோர்னியர் (ICG Dornier) விமானம் வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்ட வான்வழி கண்காணிப்பில், இந்த விபத்தால் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்பது உறுதியானது  

இலங்கை கப்பல்களின் உதவியுடன் இந்திய கடலோர காவல்படை தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டது

வைபவ் மற்றும் வஜ்ரா என்ற இந்திய கப்பல்களின் முயற்சியால் தீப்பிழம்புகள் மட்டுப்பட்டுல்ளன

மோசமான வானிலை, மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில், ஐ.சி.ஜி கப்பல்கள் விபத்துக்குள்ளான கப்பலில் தீயணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link