தோனி முதல் கோலி வரை! ராமர் கோவில் திறப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள்!

Wed, 17 Jan 2024-11:19 am,

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.  இந்த விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

ராமர் கோயில் திற்பபு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த திறப்பு விழாவிற்கு எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

ஜனவரி 23-ம் தேதி முதல் ராமர் கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

 

ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்தில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அப்போது பாஜக அமைப்புச் செயலாளர் கர்மவீர் சிங்கும் உடன் இருந்தார். அழைப்பிதழ் கிடைத்ததும் தோனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக சிங் கூறினார். 

 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிசிசிஐயிடம் அனுமதி கேட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link