UIDAI வழங்கும் 4 விதமான ஆதார் அட்டைகள்

Thu, 23 Jun 2022-7:55 pm,

ஆதார் லெட்டர் அனைவரது வீட்டு முகவரிக்கும் யுஐடிஏஐ மூலம் அனுப்பப்படுகிறது. இது ஒரு தடிமனான ஆதார் அட்டையாகும். இதில் நமது தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. யுஐடிஏஐ எந்த கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையை உருவாக்கிய பிறகு இந்த ஆதார் அட்டையை வீட்டு முகவரிக்கு அனுப்புகிறது. இந்த அட்டையில் ஆதார் அட்டை வைத்திருப்பவரின் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

mAadhaar மொபைல் ஆப் ஒரு மொபைல் செயலி ஆகும். இதன் மூலம் ஆதார் அட்டை மென் நகல் (சாஃப்ட் காப்பி) வடிவத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில், ஆதார் விவரங்களை நிரப்பி ஆதாரை சேவ் செய்து கொள்ளலாம். ஆதார் அட்டையில் எந்த விதமான அப்டேட் செய்தாலும், MAadhaar கார்டு தானாகவே புதுப்பிக்கப்படும். இதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

பிவிசி ஆதார் அட்டை ஒரு கிரெடிட் கார்டு போல் இருக்கும். இந்த ஆதார் அட்டை ஸ்பெஷல் ஆர்டர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் டிஜிட்டல் க்யூஆர் குறியீடும் உள்ளது. அதில் உங்களின் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.50 செலுத்தி இந்த கார்டை ஆர்டர் செய்யலாம். இந்த அட்டையின் சிறப்பம்சம் என்னவென்றால், இது கிழியாது, நீர் பட்டாலும் நனைந்து பாதிக்கப்படாது. 

இ-ஆதார் என்பது ஆதார் அட்டையின் மின்னணு வடிவமாகும். இந்த கார்டில் பாதுகாப்பான க்யூஆர் குறியீடு உள்ளது. அதை நீங்கள் ஸ்கேன் செய்து அனைத்து தகவல்களையும் குறிப்பிடலாம். கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதால், இந்தக் கார்டைத் திறக்க கடவுச்சொல் தேவை. ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க யுஐடிஏஐ மாஸ்க்ட் மின்-ஆதார் அட்டையையும் (மாஸ்க்ட் இ ஆதார் கார்ட்) வழங்குகிறது. இந்த அட்டையில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் ஆதார் அட்டையின் தகவல்கள் திருடப்படாமல் இருக்க இது உதவும். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link