புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு லட்சுமி அன்னையின் அருள் கிடைக்கும்

Sun, 14 Aug 2022-3:53 pm,

ரிஷபம்: இந்த புத்தாதித்ய ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களை கொண்டு வரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இந்த நேரம் தொழிலுக்கு சிறந்ததாக இருக்கும் என்று சொல்லலாம். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும். வியாபாரம் பெருகும். நெட்வொர்க் அதிகரிக்கும், இது நன்மை பயக்கும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வேலை மற்றும் வியாபாரத்தில் பொன்னான நேரத்தைக் கொண்டு வரும். அவர்களின் வருமானம் கணிசமாக உயரும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு பல நன்மைகளைத் தரும். பெரிய ஆர்டர்களைக் பெறலாம். புதிய வேலையைத் தொடங்கலாம். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் தோன்றும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள். பதவி உயர்வு தடைபட்டிருந்தால், இப்போது கொடுக்கலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வியாபாரம் செழிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். கௌரவம் உயரும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link