Health News: கோடைக்காலத்தை கவலையின்றி கழிக்க குளு குளு டிப்ஸ் இதோ

Sun, 13 Jun 2021-2:40 pm,

கோடைக்காலத்தில் (Summer) நீர்மோரை விட சிறந்த, எளிய பானத்தை நாம் காண முடியாது. உச்சி வெயில் காலத்தில் வீதிகளில் பந்தல் போட்டு சாலைகளில் செல்பவர்களுக்கு நீர்மோர் கொடுப்பது நம் மரபு. நீர்மோர் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. இது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீர்மோரை தினமும் குடித்தால், அது அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், குடல் இயக்கம் எளிதாகி மலச்சிக்கல் காணாமல் போய்விடும். நீர் மோர் நம் உடலை, குறிப்பாக செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கிறது.மோரில் பலவகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், அதாவது பொட்டாசியம், வைட்டமின் பி போன்றவை உள்ளன. இது புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகவும் இருக்கிறது. மோர் உடலில் வைட்டமின் குறைபாட்டை சமநிலைப்படுத்த ஏற்றது. 

இளநீர் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இது அற்புதமான குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அதிகமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளதால் வெயிலில் உடல் சோர்வை நீக்க இளநீர் பெரிய அளவில் உதவுகிறது. உடலில் நீர் சத்தை அதிகரிக்கவும், உடலை ஊட்டச்சத்துடன் வைத்திருக்கவும் இளநீர் உதவுகிறது.

 

நீர்சத்து மிக அதிகமாக உள்ள பழம் தர்பூசணிப் பழம். இவை நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கின்றன. உடலுக்கு கனத்தன்மையை அளிக்காமல் தேவையான சத்தை மட்டும் கொடுக்க வல்லது தர்பூசணி. நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் அவதிப்படுபவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இதில் இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது.

 

புதினா எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவான ஒரு மூலிகையாகும். இதை நீங்கள் சட்னியாக, ராய்தாவில், துவையலாக என்று பல வகைகளில் தயார் செய்து உண்ணலாம். புத்துணர்ச்சியூட்டும் பானங்களிலும் இதை சேர்க்கலாம். அதன் புத்துணர்ச்சி தரும் பண்பு மற்றும் குளிர்ச்சியான சுவை காரணமாக, இது கோடைல்கால உணவுத்  தேவைகளில் பிரதானமாக கருதப்படுகின்றது. 

வெங்காயம் ஆச்சரியப்படுத்தும் குளிரூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. நமது உணவில் நாம் வெங்காயத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். வெங்காயம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வெங்காயம் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது.

அந்த காலம் முதல் இப்போது வரை வெயில் காலத்தில் உடனடி புத்துணர்ச்சிக்கு எலுமிச்சை சாறை அடித்துக்கொள்ள வேறு எந்த பானமும் இல்லை. அதில் உப்பு, சர்க்கரை, புதினா, சீரகம் என பலவற்றை சேர்த்து பல தினுசுகளில் பருகலாம். எப்படி குடித்தாலும் இது நம் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை மட்டுமே அளிக்கின்றது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link