ஜிகர்தண்டா முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது நான் தான்: ராகவா லாரன்ஸ்!

Mon, 09 Oct 2023-12:09 pm,

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.  படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

 

1970களின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், ராகவா லாரன்ஸ் பாண்டியா என்ற இரக்கமற்ற கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இன்னொரு பக்கம் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக நடிக்கிறார். 

 

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் முக்கிய தகவலை வழங்கி உள்ளார்.

 

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் அசால்ட் சேது கேரக்டரில் நடிக்க வேண்டியது நான் தான். படம் பார்த்து ஒரு நாள் முழுவதும் வருத்தப்பட்டேன்.

 

ஆனால் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். ​​20 கோடி படத்தில் நடிக்காமல், 100 கோடி படத்தில் நடித்து இருக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 

ஹிட் படங்களை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னை முற்றிலும் வித்தியாசமாக இந்த படத்தில் காட்டியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link