வடகொரியாவால் பரிசோதிக்கப்பட்ட ICBM! திரவ எரிபொருள் ஏவுகணை! அதிர்ச்சியூட்டும் விவரங்கள்

Sat, 26 Mar 2022-7:52 am,

உலகிலேயே முதன்முறையாக சாலை-மொபைல் லாஞ்சரில் இருந்து திரவ எரிபொருளை பயன்படுத்தி மிகப்பெரிய ஏவுதலை நிகழ்த்தியுள்ளது வடகொரியா

கொரிய தீபகற்பத்திலும் அதைச் சுற்றியும் ராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அணுவாயுதப் போரின் ஆபத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் நீண்டகால மோதல்கள் நிச்சயிக்கப்படுவதாக  KNCA தெரிவித்துள்ளது.

நாட்டின் மூலோபாய சக்திகளின் நவீன அம்சம் குறித்து உலகை நம்பவைக்க இந்த சோதனை உதவும் என்று நாட்டின் உச்சத் தலைவர் கிம் ஜாங் உன் இந்த ஏவுகணை சோதனையை செய்ததாக வடகொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை சோதனையில் திரவ எரிபொருளைக் கொண்டு வடகொரியா நடத்தி இருக்கிறது. இது ‘மான்ஸ்டர் ஏவுகணை’ என அழைக்கப்படுகிறது. 

Hwasong-17 எனப்படும் உலகின் மாபெரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அக்டோபர் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டு, வடகொரிய ராணுவ அணிவகுப்பிலும் இடம்பெற்றது

Hwasong-17 அமெரிக்காவில் எந்த இடத்தையும் அடையும் பொருட்டு மிகத்துல்லியமாக தாக்கும் அளவுக்கு திறன் படைத்தது 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link