சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்றுத் தருமா ராகு பெயர்ச்சி? வக்ர கேது என்ன செய்வார்?

Wed, 06 Sep 2023-8:30 am,

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 13ம் தேதி (அக்டோபர் 30) திங்கட் கிழமையன்று ராகு கேது பெயர்ச்சி என்றும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 21 (நவம்பர் 7) செவ்வாய்க்கிழமை நிழல் கிரகங்கள் தங்கள் அடுத்த சுற்றைத் தொடங்குகின்றனர். ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பிரவேசிக்க உள்ளார்கள். இந்த பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் என்ன பலன்கள்?

உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகரிக்கும் என்றாலும், பணியில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண லாபம் கூடும். வேலையில் இடம் மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. வாழ்க்கையில் திருப்புமுனையான காலகட்டம்

ராகு மீனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும், உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்வதும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். 

உங்கள் பேச்சை அனைவரும் கேட்பார்கள், மனதில் சிந்தனைகள் அதிகரிக்கும், கவலைகளை விட்டு ஒழித்தால், மனதில் அமைதி நிலவும். மனம் பக்குவப்படக்கூடிய காலம் இது

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும் காலம் இது. வீடு, மனை வாங்குவதிலும், ஆடை, ஆபரணங்கள் வாங்குதல் விஷயத்தில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது

மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள்

பொருளாதார நிலை மேம்படும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும், நிம்மதியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது என்பதை நன்றாக உணர வைப்பார் கேது பகவான்

மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

மனம் அலைபாயும், எனவே சுயக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் இது  

மனம் அமைதி குறையும், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் வாக்கு அம்பலம் ஏறும் 

குடும்பத்திலும், சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் நலம் மற்றும் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. யாரிடம் பேசினாலும், வாக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும். குல தெய்வ வழிபாடும், முன்னோர் வழிபாடு செய்வதும் நற்பலன்களை அதிகரிக்கும்

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும், மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது என சுப செலவுகள் நடக்கும் என்பதால், செலவுகள் அதிகமானாலும் கவலைப்படத் தேவையில்லை. சுபகாரியங்கள்  கைகூடும்

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link