INDvsENG: நடுவரிடமே ரூல்ஸ் பேசிய அஸ்வின்..! அபராதம் விதிக்கப்படுமா?

Sat, 03 Feb 2024-1:43 pm,

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

 

டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் விளையாடியது. ஜெய்ஸ்வாலை தவிர மற்ற வீரர்கள் யாரும் விளையாடவில்லை.

 

பின்வரிசையில் இறங்கிய அஸ்வின் முதல் நாள் ஆட்டநேரம் முடியும் வரை ஜெய்ஸ்வாலுடன் களத்தில் இருந்தார்.

 

நடுவர்கள் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தவுடன் திடீரென அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்ய தொடங்கினார் அஸ்வின்.

 

என்னவென விசாரித்தபோது, முதல் நாளில் 93 ஓவர்கள் இங்கிலாந்து அணி பந்துவீசியிருக்கிறது. இது விதிமுறைப்படி தவறு. ஒரு நாளில் 90 ஓவர்கள் தான் வீச வேண்டும்.

 

நேரம் இருக்கிறது என்பதற்காக கூடுதல் ஓவர் வீச இங்கிலாந்து அணியை அனுமதித்தனர். இதுதான் அஸ்வின் கோபத்துக்கு காரணமாம். இது குறித்து அவர் நடுவரிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்ததால் அஸ்வின் மீது ஐசிசி அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link