இந்திய அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் அபராதம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் செக்..!

Fri, 29 Dec 2023-8:44 pm,

செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஸ்லோ ஓவர் ரேட் வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

 

இந்த அபராதத்தால், இந்திய அணிக்கு இரண்டு WTC புள்ளிகள் மைனஸ் செய்யப்பட்டு, 10 சதவீதம் போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அபராதத்தால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெனால்டிக்கு முன் 16 புள்ளிகள் மற்றும் 44.44 என்ற பிசிடியுடன் 5வது இடத்தில் இருந்த இந்திய அணி, பெனால்டிக்கு பிறகு 38.89 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

 

இதன்மூலம் 6வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு, ரோகித் சர்மா பொறுப்பேற்றுள்ளார். 

 

போட்டியின் போது, இந்திய அணி ஸ்லோ ஓவர் ரேட் வீசியதை ரோகித் சர்மா ஒப்புக்கொண்டார். இதனால், முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி முடிவு செய்தது.

 

இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அணிக்கு பெரும் பின்னடைவாகும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

 

அதே நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னேற, தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டியது அவசியம்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link