ஆடி மாத முதல் திங்கட்கிழமை ராசிபலன்... 5 நட்சத்திரங்களுக்கு அருமை! சிவவழிபாடு வளம் தரும்!

Mon, 22 Jul 2024-7:38 am,

பணவரவு திருப்திகரமாக இருக்கும், அதேபோல செலவுகளும் அதிகரிக்கும். திடீர் வேலைகளால் அலைச்சல் உண்டாகும். கலை பொருட்கள் வாங்க ஆர்வம் உண்டாகும், ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் மேன்மை உண்டாகும்.

ஆன்மீகத் தேடல் அதிகரிக்கும். யாருக்கும் எதற்காகவும் இன்று வாக்குறுதி அளிக்க வேண்டாம், இன்று கவனமாக செயல்படாவிட்டால், மோசமான அனுபவம் கிடைக்கும். திறமைகள் இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் இல்லையே என்ற ஏக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்

குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து நடந்துக் கொண்டால் நிம்மதி என்பதை உணரும் நாள் இன்று. தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆனால் விட்டுக் கொடுத்துச் சென்றால் நல்லது. உயிர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதல் நிம்மதியும் தைரியமும் அதிகரிக்கும் தொழிலில் ஆதரவான சூழல் நிலவும். சிந்தனைகளில் தெளிவும் உறுதியும் ஏற்பட்டு, குழப்பம் நீங்கும். குழந்தைகள் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த சோர்வு மறையும். சுப காரிய முயற்சிகள் நல்லபடியாக நடைபெறும்

பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் மனதிற்கு நிம்மதியைத் தரும். நண்பர்களின் வருகை உற்சாகத்தைக் கொடுக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள் இது

அலுவலகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும் அதே நேரத்தில் பல சிந்தனைகளும் மனதை குழப்பும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வருமானம் குறைவாக இருப்பதால் என்னென்ன பிரச்சனைகள் உருவாகும் என்பதை அசை போடும் நாள் இது...  

பிரச்சனைகள் விலகும் நாள் இது. சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நிதானமாகவும், தெளிவாகவும் பேசுவது நல்லது. சிலரின் அறிமுகம் வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் உங்களுடைய செல்வாக்கு மேம்படும். 

நிதி நெருக்கடிகள் குறையும். பணத்தை எப்படி கையாளது என்பது புரிந்துக் கொண்டால் புதிய நம்பிக்கை ஏற்படும், பிரச்சனைகள் விலகும். நிதானமாக செயல்படுவது நல்லது, இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். 

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழகும் விதத்தில் மாற்றங்களை செய்தால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

சிந்தித்து செயல்பட்டால் பகை விலகும். வீண் விவாதங்களை தவிர்த்தால் தொழில் போட்டிகளை சமாளிக்கலாம். வேலையை மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும் என்றாலும் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது

வாய் வார்த்தைகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்வது நல்லது. யாவாராயினும் நா காக்க என்ற திருக்குறள் உங்களுக்கானது தான். பண வரத்து அதிகரிக்கும், நிலுவைத் தொகைகள் வந்து சேரும்

செலவுகளால் நெருக்கடி ஏற்படும். அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாக, சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிம்மதியைக் கொடுக்கும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link