ஐபிஎல் 2024 திருவிழா: பிரம்மாண்டமாக தொடங்கும் தேதி இதுதான்..!

Mon, 18 Dec 2023-9:01 pm,

ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி செவ்வாய்கிழமை துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

 

10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு எடுக்க இருக்கின்றனர்.  

 

ஐபிஎல் 2023 ரன்னர்-அப் குஜராத் டைட்டன்ஸ் அதிக தொகையை வைத்துள்ளது - ரூ 38.15 கோடி.

 

இந்த ஏலத்தில் சுமார் மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். ஆனால் காலியாக இருப்பது 77 இடங்கள் மட்டுமே.

 

ஏலம் முடிந்தவுடன் ஐபிஎல் 2024 தொடர் தொடங்கும் தேதி இறுதி செய்யும் பணிகள் தொடங்க இருக்கிறது.

 

இருப்பினும் மார்ச் 20 ஆம் தேதிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது

 

மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

 

இறுதிப் போட்டியை பொறுத்தவரை இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்து முடிவு செய்யப்படும். 

 

இது குறித்து ஐபிஎல் நிர்வாகமும் 10 ஐபிஎல் அணிகளிடமும் தெளிவாக தெரிவித்துள்ளது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link