Kalaignar 100: நான் நெருப்பு இல்லை... செருப்பு - ரஜினியிடம் சொல்லிய கலைஞர் - நினைவுக்கூர்ந்த கமல்!

Sat, 06 Jan 2024-10:31 pm,

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,"விஜயகாந்துடைய இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி முடித்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றி. இந்த பண்பு அங்கிருந்து (கருணாநிதி) வந்தது" என்றார். 

 

"நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சொல்லக்கூடிய தைரியம் அவருக்குண்டு" என கமல்ஹாசன் கருணாநிதியை நினைவுக்கூர்ந்து பேசினார். மேலும், அரசியலில் இருந்த போது சினிமாவை காத்தவர் கலைஞர் எனவும் பேசினார்.

மேலும், ரஜினிக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை கமல்ஹாசன் நினைவுக்கூர்ந்து பேசினார். அதாவது, ரஜினி ஒருமுறை கருணாநிதியை 'நீங்கள் நெருப்பு, சார்' என்று கூறியுள்ளார், அதற்கு கருணாநிதி, 'நான் செருப்பு, வந்து என்னை அணிந்துகொள்ளுங்கள்' என சொன்னதாக கமல்ஹாசன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். 

 

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த்,"ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு நாங்கள் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி இது" என்றார்.

1955ஆம் ஆண்டில் சம்பாதித்து வாங்கிய வீடுதான் தற்போதைய கோபாலபுரம் வீடு. அதில் ஒரு படிக்கட்டுக்கூட மாறாமல் இருக்கிறது. அதான் அவருடைய (கருணாநிதி) எளிமை. அதே போல் தான் ஸ்டாலின் அவர்களிடமும் நான் பார்கிறேன்" என்றார். 

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூர்யா, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link