பெண்களை தொழில் முனைவோராக்கும் மத்திய அரசின் திட்டம் பற்றி தெரியுமா?

Thu, 29 Feb 2024-11:30 pm,

மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வரை நிலையான வருமானம் பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கும் திறன் மேம்பாட்டு திட்டம் தான் `லக்பதி தீதி திட்டம். 

 

இந்தத் திட்டம் பெண்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி, தொழில்முனைவோராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர பான் கார்டு, வங்கி கணக்கு, வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும்.

 

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் தங்கள் கிராமங்களில் குறுந்தொழில்களை அமைத்து ரூ. 1 லட்சம் நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகாட்டல்ள் கிடைக்கும்.

 

எல்இடி பல்புகள் தயாரித்தல், பிளம்பிங் செய்தல், ஆளில்லா விமானம் பழுது பார்த்தல் போன்ற தொழில்நுட்பத் திறன்கள் பெண்களுக்கு கற்பிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் பல்வேறு சுயஉதவி குழுக்களில் சேரலாம். 

 

சுமார் 15000 மகளிர் சுய உதவி பெண்கள் ட்ரோன் இயக்கம் மற்றும் பழுதுபார்க்கவும் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. ட்ரோன் நீர்ப்பாசனம், விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதுடன் துல்லியமான விவசாய பயிர் கண்காணிப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை செயல்படுத்துகிறது.

 

மகளிர் குழுவில் உறுப்பினராக இருந்தாலே இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவார்கள்.

 

அதன்பின், லக்பதி திதி யோஜனாவுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பவும். அனைத்து தகவல்களும் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். பின்னர் விண்ணப்பப் படிவத்தை தேவையான அனைத்து ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட அலுவலகத்திலோ அல்லது அங்கன்வாடி மையத்திலோ சமர்ப்பிக்கவும்.

 

விண்ணப்பத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். திட்டத்தின் தகவல்தொடர்பு செயல்முறையின்படி இது கடிதம், SMS அல்லது மின்னஞ்சல் மூலமாக இருக்கலாம். பின்னர் பயிற்சி திட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதன்பிறகு, லக்பதி திதி யோஜனா நிதி உதவியை பெறலாம்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link