எப்போதும் பண மழையில் நனையும் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Thu, 28 Apr 2022-6:15 pm,

இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். செவ்வாயின் தாக்கத்தால், இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பணிபுரியும் துறையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். இவர்கள் ஒன்றை செய்ய முடிவெடுத்து விட்டால், அதை வெற்றிகரமாக செய்து முடித்த பின்னரே நிம்மதி அடைவார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் எப்போதும் இருக்கும். 

இந்த ராசியை செவ்வாய் ஆட்சி செய்கிறது. அதனால் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் பயமற்றவர்களாகவும் தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதை பெற வேண்டும் என நினைத்தாலும், அதற்காக கடினமாக உழைக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் சிறு வயதிலேயே வெற்றியை அடைவதற்கு இதுவே காரணம். இது தவிர, பண விஷயங்களில் மற்றவர்களை விட அவர்கள் எப்போதும் முன்னோக்கி இருக்கிறார்கள்.

மகர ராசியின் அதிபதி சனி பகவான் என கருதப்படுகிறது. சனியின் தாக்கம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், அச்சமற்றவர்கள், தைரியசாலிகள். அதே நேரத்தில், அவர்கள் நேர்மையாகவும் பொறுமையாகவும் இருக்கிறார்கள். இது தவிர இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் துணையும் கிடைக்கும். அவர்கள் வேலை செய்யும் துறையில் அதிக அளவு வெற்றிகளைப் பெறுகிறார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் மீது சனி பகவானுக்கு சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். சனிபகவானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசியை சேர்ந்த பெரும்பாலானோரின் பொருளாதார நிலை எப்போதும் நன்றாக இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link