மாரி செல்வராஜ் ஒரு மனநோயாளி - திட்டித்தீர்த்த பிரபல நடிகர்!

Sun, 06 Aug 2023-1:44 pm,

மாரி செல்வராஜின் மாமன்னன் உலகம் முழுவதும் ஜூன் 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியது  நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் முன்னணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். “சாதி வெறியை தூண்டி படம் எடுப்பது மிகவும் கேவலமான செயல் என கூறியுள்ளார்.

 

மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் இன்று ஜாதியை உயர்த்தி படம் எடுக்கிறார்கள். எங்களை அடிப்பதாகவும், இழிவு படுத்துவதாகவும் கூறி இன்றைய இளைஞர்கள் மத்தியில் சாதி வெறியை தூண்டி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

 

மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ, இதை உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், 'அவன் ஒரு சைக்கோ சார்.. எல்லாரையும் அடிப்பான்..' என்று பல நடிகர்களை செட்டில் அடித்து விடுகிறார். கர்ணன் படத்தில் நிஜமாகவே ஒரு நடிகை அப்படி அடிக்கப்படுகிறார்.  இது குறித்து அந்த பெண் எனது போனில் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது.

 

சொந்த ஊரிலேயே படப்பிடிப்பு நடத்துவார்.  தன் ஜாதிக்காரர்களை மட்டும் டயலாக் பேச வைப்பது எப்படி நியாயமாகும்? ஜாதி வெறியைத் தூண்டும் படங்களை எடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும், இப்படிப்பட்ட படங்களை எடுக்க இயக்குநர் சங்கம் அனுமதிக்கக் கூடாது, என்கிறார் டெலிபோன் ராஜ்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link