12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷபத்தில் குரு... பம்பர் பலன்களை அனுபவிக்கும் சில ராசிகள்!

Fri, 22 Mar 2024-8:57 am,

கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாகின்றன. எனினும், சில  பெயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் ஒன்று குரு பெயர்ச்சி. மே மாதம் ஒன்றாம் தேதி, மதியம் 02:29 மணிக்கு, ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். இதனால் எந்தெந்த ராசிகள் பம்பர் பலன்களை பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

குரு பகவானின் ஆசி இருந்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் செல்வம் ஆகியவற்றிற்கு குறைவிருக்காது. திருமண போன்ற முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகள் குருவின் அருளால் ஏற்படுகிறது. ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருந்தால், அதிர்ஷ்டத்திற்கும் செல்வத்திற்கும் குறைவே இருக்காது.

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் உள்ள நிலையில் ரிஷப ராசிக்கு செல்வது, மேஷ ராசிகளுக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும். வேலையில் தொழிலில் வெற்றி பெறுவார்கள். நிதி ஆதாயத்திற்கு குறைவே இருக்காது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

ரிஷப ராசியினர் குரு பெயர்ச்சியினால், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் பெருகும்.

கடக ராசியினருக்கு குரு பெயர்ச்சி, வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். பணவரவு வருமானம் அதிகரிக்கும். ஆடம்பர சுகத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசியினருக்கு குரு பெயர்ச்சி, அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக அமையும். மனதில் உள்ள ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆதாயமும் கிடைக்கும்.

 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link