மழைக்காலத்தில் வீட்டிலேயே இருந்து போர் அடிக்குதா? ‘இந்த’ 8 விஷயங்களை செய்யலாம்!

Tue, 15 Oct 2024-12:56 pm,

புத்தகம் படிப்பது: 

ஒரு நாவலில் மூழ்குங்கள் முயற்சி செய்யுங்கள். அல்லது புதிய வகை புத்தகத்தை படிக்கலாம். மழையின் சத்தம் உங்கள் வாசிப்பை இன்னும் அழகாக்கும். 

படம் அல்லது சீரீஸ் பார்ப்பது:

நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய படம் அல்லது தொடரை பாருங்கள். இது, உங்கள் பொழுதை ஜாலியாக கழிக்க உதவும். 

சமையல் அல்லது பேக்கிங் செய்வது:

உங்களுக்கு பிடித்தத்தை, பிடித்தவர்களுடன் செய்து மகிழுங்கள். அடுப்பில் இருக்கும் சூடு, வெளியில் இருந்து வரும் ஜில்லென்ற உணர்வை குறைக்க உதவும். 

விளையாட்டு:

ஜிக்சா புதிர் விளையாட்டுகள், போர்டு கேம்கள் அல்லது வீடியோ கேம்கள் மூலம் உங்கள் பொழுதை போக்கலாம்.

கைவினை பொருட்கள்:

பெயிண்டிங் செய்வது, கூடை பின்னுவது, எதையாவது உருவாக்குவது போன்ற வேலைகளில் உங்களை நீங்களே ஈடுப்படுத்தி கொள்ளலாம்.

சுத்தம் செய்தல்:

நீங்கள் இருக்கும் இடத்தை, டேபிளை, அலமாரியை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தி வைக்கலாம். 

தியானம்:

இந்த பிசியான காலச்சூழலில் நம்மில் பலர் தியானம் செய்ய, நம்முடன் பேசிக்கொள்ள மறந்து விடுகிறோம். வீட்டில் இருக்கும் சமயத்தில் இதை செய்து உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம். 

நண்பர்கள்/குடும்பத்தினருடன் பேசுதல்:

உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கலாம். இதனால், நீங்கள் உங்களுக்குள் இருக்கும் உறவை ஆழமாக்க முடியும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link