பழங்குடி இனத்தவருடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

Sat, 21 Jan 2023-10:10 am,

NO FOOD WASTE, சென்னை பிரிவு தன்னார்வல நிறுவனம், விழா மற்றும் உணவகங்களில் மிதமாக நல்ல நிலையில் உள்ள, உண்ணக்கூடிய நிலையில் உள்ள உணவை பெற்று அதை பசியில் உள்ளோருக்கு அளிக்கிறது.

 

தை பொங்கல் தமிழர் விழாவை, "இரும்புளியூரில் உள்ள பழங்குடி இனத்தவருடன்" பொங்கல் கொண்டாடி உள்ளனர்.  சுமார் 50 குடும்பங்கள் உள்ள இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பாக நடந்தது.

 

சுமார் 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கோலம், நடனம், பாடல், வாலி பால் விளையாட்டுகள் நடத்தப்பட்டது. பாரம்பரிய விளையாட்டான உறியடி, கரும்பு உடைத்தல் விளையாட்டு நடந்தது.  வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் மற்றும் பேனா பென்சில் போன்றவை கொடுக்கப்பட்டது.

 

பெண்களுக்காக "பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ( Women Empowerment)" பற்றிய விழிப்புணர்வு பற்றி பலவற்றை பகிர்ந்து கொண்டனர்.

 

சிறுவர்களுக்கு Food Security உணவு பாதுகப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றி பலவற்றை எடுத்து கூறினர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link