ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!

Thu, 25 Jul 2024-4:46 pm,

ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. மெகா ஏலம் நடைபெற உள்ளதால் ஓய்வை அறிவிப்பார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்தால் அந்த இடத்திற்கு சில வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து ரிஷப் பந்த் சென்னை அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

தோனியின் இடத்தை சிஎஸ்கே அணியில் நிரப்புவது கடினமாக இருக்கும். ஐபிஎல் 2025 ஏலத்தில் சிஎஸ்கே குறி வைக்கும் 3 இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம். 

டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வரும் அபிஷேக் போரல் மீது சிஎஸ்கே கண் வைத்துள்ளது. பவர் ஹிட்டர் மற்றும் ஃபினிஷர் என எந்த ரோலிலும் இவர் செட் ஆவார் என்பதால் இவை அணியில் எடுக்கலாம்.

 

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் பிரப்சிம்ரன் சிங் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டராக இருக்க முடியும். எனவே சென்னை அணி ஏலத்தில் அவரை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.

 

ஜார்கண்ட் மாநிலத்தை ராபின் மின்ஸ் அம்மாநிலத்தில் ‘கிறிஸ் கெயில்’ என்று அழைக்கப்படுகிறார். தோனிக்கு அடுத்து சென்னை அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link