உச்சி முதல் பாதம் வரை... நோய்களை ஓட விரட்டும் இரணகள்ளி... பயன்படுத்தும் முறை !

Fri, 01 Dec 2023-10:04 am,

இரணகள்ளி இலையில் பசை போன்ற திரவம் காணப்படும். இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். ரணகள்ளி செடியின் இலை, வேர், தண்டு பகுதி என்று எதை நட்டாலும் செடி வளரும் என்பதோடு இதை வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். 

சிறுநீரக கற்களை கரைக்க இரணகள்ளி மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும், அதனை மிக எளிதில் கரைத்து துகள்களாக உடைத்து சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது் ரணகள்ளட். இதன் இலைகளை 7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். சிறுநீக கல் பூரண குணம் அடையும் என்கின்றனர் ஆயுர் வேத மருத்துவர்கள்.

பிறப்புறுப்பில் வெள்ளை படுதல் மற்றும் வேறு சில காரணங்களால், சில நேரங்களில் பெண்களுக்கு தொற்று பிரச்சனை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோய்த்தொற்றில் இருந்து நிவாரணம் பெற இரணகள்ளியில் தயாரிக்கப்படும் கஷாயம் பிறப்புறுப்பு  தொற்றை நீக்க உதவும். இரணகள்ளி கஷாயத்த்ல் 2 கிராம் தேன் கலந்து தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட வேண்டும். விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடும்.

தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, இரணகள்லி வரபிரசாதம் ஆகும். இதனை உட்கொண்டால் மைக்ரைன் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதன் இலைகளை அரைத்து நெற்றியில் தடவினால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதனை தொடர்ந்து உட்கொளவதும் ஒன்றை தலைவலி பிரச்சனைகளை நீக்குகிறது.

இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுகின்றனர். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் இரணகள்ளில் இலைகளை உட்கொள்ளலாம். இது எல்லா பிரச்சனைகளையும் நீக்கும். இரத்த ஓட்டத்தையும் சீராக வைக்கிறது.

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link